பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/273

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



15


அரசு ஒதுக்கும் செய்தி
அச்சுத்தாள் பெறும் திட்டம்


செய்தி அச்சடிக்கும் செய்தித்தாள் வெளிச் சந்தையில் வாங்கி அச்சடித்தால் விலை அதிகமாகக் கொடுத்து வாங்க வேண்டிய நிலை இருக்கிறது.

அதனால், பத்திரிகை நடத்துவோருக்கு மத்திய அரசு குறைந்த விலையில் அரசு மேற்பார்வையில் செய்தி அச்சுத்தாள் (News Print Paper) வழங்கும் திட்டம் ஒன்றுள்ளது.

அரசு விலைக் கட்டுப்பாடு அதற்கு உள்ளது. அந்த அலுவலகம், புது தில்லியில் உள்ளது. அதன் கிளை அலுவலகங்கள் சென்னை, மும்பை, கொல்கொத்தா போன்ற பெருநகரங்களில் உள்ளன.

அந்த அலுவலகத்தில் அரசு செய்தி அச்சுத்தாள் பெறும் படிவம் உள்ளதைப் பெற்று, அந்த மனுவில் அவர்கள் கேட்கும் விவரங்களைப் பூர்த்திச் செய்து, புது தில்லியிலுள்ள செய்தி அச்சுத்தாள் பதிவாளருக்கு அனுப்ப வேண்டும்.

அந்தப் பதிவாளர் அலுவலகம் ஆண்டாண்டு தோறும் அரசு அச்சுத்தாள் ஒதுக்கும் கொள்கையை (News Print Allocation -