பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/277

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



16


ஒவ்வொரு பத்திரிகையும்-அரசுக்கு
ஆண்டறிக்கை அனுப்ப வேண்டும்


த்திரிகைகளைப் பற்றிய முழு விவரங்கள் அரசுக்குத் தேவை. அப்போதுதான் அவற்றை ஒரு ஒழுங்கு முறையில் நெறிப்படுத்த முடியும். அதற்கு உதவியாக பத்திரிகையாளர்கள் ஒவ்வொருவரும் அதற்கு ஆண்டு அறிக்கை அனுப்ப வேண்டும் என்ற கட்டுப்பாட்டை உருவாக்கி இருக்கிறது அரசு.

ஒரு பத்திரிகையாளர், அவர் நடத்தும் பத்திரிகையைப் பற்றிய அந்த ஆண்டின் முழு விவரங்களை அதாவது Annual Statement விவரத்தை, புது தில்லியிலுள்ள பத்திரிகைப் பதிவாளருக்கு அனுப்ப வேண்டும.

இந்த விவரங்களைப் பத்திரிகைச் சட்ட விதிப்படிவத்துள் பூர்த்தி செய்து, ஃபிப்ரவரி திங்கள் இறுதிக்குள் அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பும் படிவம் II-ல், கடந்த ஆண்டுக்குரிய எல்லா விவரங்களையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.

பத்திரிகை உடைமையையும், ஆசிரியர் பற்றிய முழு தகவல்களையும், IVம் படிவத்தில் பூர்த்தி செய்து மார்ச் மாதங்களில் வரும் இதழ்களில் வெளியிட வேண்டும்.