பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

37


அற்புதமான செயலென்று மற்ற நாட்டவரால் மதித்துப் போற்றப்படும் கட்டிடக் கலைச் செய்திகளானது.

புராணக் கருத்துக்களை
சீனா எதிர்த்தது?

சீன நாட்டு மக்கள் உண்மையான வரலாற்றுச் சம்பவங்களுக்குத்தான் முதன்மையான இடம் வழங்கினார்கள். புராணக் கருத்துக்களுக்கு சிறப்பிடம் அளிக்கவில்லை.

சீனர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு உலோகத்தின் பயனைக் கண்டறிந்து பயன்படுத்தி வாழ்ந்தார்கள். பட்டுத் துணி, கண்ணாடி, வெடி மருந்து, பீரங்கிகள், திசைகாட்டும் கருவிகள், துருவத்தின் காந்த சக்தி, காகிதம் செய்யும் முறைகள் போன்ற புதுமைச் சக்திகளை உலகத்தில் முதன் முதலாக கண்டுபிடித்த நாடே சீனாதான்.

சீன மொழி எழுத்துக்கள் கி.மு. 16ம் நூற்றாண்டிலேயே எழுத்து வடிவம் பெற்றது. கி.மு. 3ம் நூற்றாண்டிலே உலக அதிசயங்களுள் ஒன்றாக இன்றும் குறிப்பிடப்படும் சீனப் பெருஞ்சுவர் கட்டப்பட்டது. இது உலகத்திலேயே மிக நீளமான சுவர். இது 8 மீட்டர் உயரம் உடையது; ஒவ்வொரு 200 மீட்டர் இடைவெளியில் 1 முதல் 11 மீட்டர் உயரமுடைய சிறு கோபுரங்கள் அந்தப் பெருஞ்சுவர் மீது கட்டப்பட்டிருக்கின்றன. சுவர் அடிப் பகுதி 8 மீட்டர் அகலமும், மேற்பகுதி 5 மீட்டர் அகலமும் உடைய இந்தச் சுவர்மீது இருப்புப் பாதை போடப்பட்டு குதிரை வீரர்கள் சவாரி செல்லும் அமைப்பில் உருவாக்கப்பட்டதாகும்.

கி.மு. 460 - முதல் 377 வரை, அந்தக் காலக் கட்டத்தில், மக்கள் காட்சிகளை நேரில் கண்டு அனுபவித்த இந்தகையச் செய்திகளைப் பரப்பினார்கள். கிரேக்க மருத்துவர் ஹிப்பாகிரட்டஸ் காலத்துக்கு முன்பேயே, ஹுவோடா Huato என்பவர் அறுவை சிகிச்சை மருத்துவம் செய்த மேதை என்று சீன மருத்துவம் கூறுகின்றது. அப்போதே அக்குபஞ்சர் என்ற மருத்துவம் இருந்தது.