பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

43



பிளேட்டோ
தத்துவம்:

‘Platonic Doctrine of Reminiscence’ என்ற கொள்கை விலை மதிக்க முடியாத, மிக உயர்ந்த, பெருமை வாய்ந்த, அருமையான கிரேக்கப் பேரறிஞர் பிளேட்டோ என்ற தத்துவஞானி உருவாக்கிய சித்தாந்தம் ஆகும். இந்த பிளேட்டோவின் கோட்பாட்டைச் சிந்தாமல், சிதறாமல் அப்படியே பின்பற்றித் தனது ‘மார்னிங் போஸ்ட்’ என்ற பருவ இதழில் டேனியல் ஸ்டூவர்ட் எழுதினார்.

இதே பத்திரிகையில்தான் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான கோல்ரிட்ஜ், Coleridge தனது கட்டுரைகளை அப்போது எழுதி வந்தார். அதனால் சிறிது சிறிதாக 1834ம் ஆண்டில் அந்த ‘தி டைம்ஸ்’ என்ற பத்திரிகை 10,000 பிரதிகள் வரை விற்றன. 1834ம் ஆண்டில் 23,000 பிரதிகள் விற்றன. 1854ம் ஆண்டில் அதன் விற்பனை 51,000 ஆயிற்று.

ஜான் ஸ்டார்ட் டார்ட், ‘தி டைம்ஸ்’ பத்திரிகையைப் பல ஆண்டுகளாக நடத்தி வந்தார். 1816ம் ஆண்டில் தாமஸ் பார்னெஸ் அதன் ஆசிரியராக இருந்தார். அந்த பத்திரிகைத்தான் உலகத்தில் முதன் முதலாக அயல்நாட்டு நிருபர்களை ஆங்காங்கே பணிபுரிய நியமித்த முதல் பத்திரிகை ஆகும். அவ்வாறு நியமிக்கப்பட்ட முதல் வெளிநாட்டு நிருபர் பெயர் கிராப் ராபின்சன் என்பவர் ஆவார்.

அதற்குப் பிறகு இங்லீஷ் பத்திரிகை உலகம் 19ம் நூற்றாண்டினை நோக்கி இறுதிவரைப் புதிய மறுமலர்ச்சிப் பாதையில் அறிவு உலா வந்து கொண்டிருந்தது. சில நேரங்களில் முற்போக்கு எண்ணமுடைய இங்கிலாந்து பத்திரிகைகள், அவற்றின் அறிவுக் கூர்மையாலும், புதுப் புது கருத்துக்களை வெளியிடுவதாலும், நாட்டு நடப்புகளை மக்கள் விரும்பும் வகையில் பிரசுரித்ததாலும், ஏறக்குறைய 20 லட்சம் பிரதிகள் விற்பனையாகி மக்களை அறிவுக் கடலில் ஆட வைத்தன. 1938ம் ஆண்டு வரை இங்கிலாந்து இதழியல் உலகம் கொடிக் கட்டிப் பறந்து கொண்டிருந்தது.