பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

உலக நாடுகளில் உருவான பத்திரிக்கை வளர்ச்சிகள்



‘தி சாட்டர் டே ரெவ்யூ’ “Saturday Review” என்ற பத்திரிகையில் ‘ஷா’ மூன்றாண்டு காலம் நாடக விமர்சனக் கட்டுரைகளை எழுதினார். அந்த இடை நேரத்தில் தான் உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியரான இப்சனுடைய நாடகக் கோட்பாட்டை ஏற்று The Quintesence of Ibsenism என்ற நூலை எழுதியதால், அந்த புத்தகத்தைப் படித்து அறிஞருலகமே வியந்தது.

தமிழ் நாட்டு தேசிய கவிஞரான பாரதியார், பாஞ்சாலி சபதம் என்ற நூலை ஒரு புதிய நோக்கில் எழுதியதைப் போல ‘ஷா’வும் சேக்‌ஷ்பியரின் ‘ஜூலியஸ் சீசர், ஆண்டனியும் கிளியோபாத்ராவும்’ என்ற நாடகங்களை, மாறுபட்ட கோணத்தில் படைத்திருப்பதைக் கண்டு இங்கிலாந்துக் கல்விமான்கள், ஏழ்மை நேய ஏற்றத் தாழ்வுகளை அவர் தனது நாடக உறுப்பினர்கள் மூலம் முற்போக்குச் சிந்தனைகளிலே வைத்துள்ளதைப் படித்து, சேக்‌ஷ்பியரின் சிந்தனையைவிட, ‘ஷா’ வின் சுவை மாறுப்பட்டிருப்பதைக் கண்டு உலகமே திகைத்து வியந்தது.

கி.மு. 48-ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாக எழுதப்பட்ட நாடகப் போக்கை, உணர்வை; கி.பி. 20-ஆம் நூற்றாண்டில் வாழும் மக்கள் வாழ்க்கையோடு பாத்திரப் படைப்புகளை ஒப்புநோக்கி சித்தரித்தார் ஷா.

‘மை ஃபேர் லேடி’ என்ற ஷாவின் நாடகம் அமெரிக்காவில் 2281 தடவையும், இலண்டனில் 2281 முறையும் நாடகமாக மேடையேறி நடந்த சம்பவம் - ஷாவுக்கு உலக நாடக அரங்கில் அழியாப் புகழை நிலை நாட்டியது.

சுருங்கக் கூறுவதானால், நான்கு பத்திரிகைகளில் பணியாற்றிய ஷாவின் திறமை, கால சூழ்நிலை, சிந்தனை மறுமலர்ச்சிகளால் அவர் வரைந்த நாடகங்கள் எல்லாமே உலகுக்கு நகைச்சுவை நயம் வழங்கியதோடு நில்லாமல், பெரும் நாடக வித்தகர் என்ற பெயரையும் அவருக்குத் தேடித் தந்தன எனலாம்.

பத்திரிகைப் பணிகளின் ஈடுபாட்டால், ஷா தனது நாடக ஓவியங்களை எல்லாம் மேதை சேக்ஸ்பியரைப் போல கவிதை