பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



என்னதான் எழுதினாலும், உண்மையை ஒப்பிப் பாராட்டுவோர் அத்திப் பூ போன்றவர்களே! இல்லையானால், “ஆனந்த விகடன்” பத்திரிகையில் “பாரதி உலகக் கவியல்ல; அவர் பாடலில் வெறுக்கத் தக்கவை உள்ளன” என்று “கல்கி” எழுதுவாரா?

இவ்வாறு எழுதிய அந்த நேரத்து மூத்தப் பத்திரிகையாளரான கல்கிதான், எட்டயபுரம் பாரதி மண்டபத்தை எழுப்பி விழா எடுத்திடக் காரணராகவும் இருந்தார். காலச் சக்கரம் எப்படி மாறி மாறிச் சுழல்கிறது பார்த்தீர்களா?

‘கல்கி’ எழுதியதைக் கண்ட பாரதிக்குத் தாசன் சும்மா இருப்பாரா? ஏந்தினார் எழுது கோலை! பாரதியைத் தாழ்வாக மதித்தவரைப் பார்த்து, “பாரதி உலக கவி, அவர் ஒட்டைச் சாண் நினைப்புடையாரல்லர், ஐயர் கவிதைக்கு இழுக்கும் கற்பிக்கின்றார். அழகாக முடிச்சவிழ்த்தால் விடுவார் உண்டா? பாரதி சிந்துக்குத் தந்தை; குவிக்கும் கவிதைக் குயில்; செந்தமிழ்த் தேனீ; இந்நாட்டினைக் கவிக்கும் பகையைக் கவிழ்க்கும் முரசு; நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா, காடு கமழும் கற்பூரச் சொற்கோ; திறம்பாட வந்த மறவன்; புதிய அறம்பாட வந்த அறிஞன்; தமிழால் பாரதி தகுதி பெற்றார்; தமிழ், பாரதியால் தகுதிபெற்றது” என்றார்!

ஒருவன் எழுத்தைப் பாராட்டவும் “வல்வில் ஓரி அறிவு வேண்டும்”. கவிஞன் இனம் தானே கவிஞன் அருமையைப் பெருமையாகப் பேச முடியும்? இல்லையா?

அதனைப் போல, இந்த நூலையும் நாளை ஒருவர் குறை கூற முன்வரலாம். அவர் யார் தெரியுமா? ‘இதழியல் கலையை அன்றும் - இன்றும்’ முழுமையாக அறிய முயற்சி செய்யாதவரே!

எந்தத் துறையில் ஒரு பத்திரிகையாளன் திறமை பெற்று சகலகலா வல்லவனாக வேண்டுமோ, அந்தத் துறைக்கான

7