பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

91



இந்த ஜால்ரா கலைக்கு எதிராக, அஞ்சா நெஞ்சோடு, ‘இந்தியன் வொர்ல்டு’ (Indian World) என்ற பத்திரிகையை வில்லியம் டுன் (William Dune) என்பவர் தோற்றுவித்தார். ஆனால், இடையே பல இடையூறுகளால் அது நின்று விட்டது.

மேலே கூறப்பட்டவை அனைத்தும் வங்க மாநிலத்திலே இருந்து வெளிவந்ததைக் கண்ட ‘மெட்ராஸ் ஸ்டேட்’ (Madras State) என்று வெள்ளையர்களால் அழைக்கப்பட்ட இன்றைய தமிழ்நாட்டின் சென்னை நகரிலிருந்தும் சில பத்திரிகைகள் வெளி வந்தன.

தமிழ்நாட்டில்
பத்திரிகைகள்

‘சென்னை கூரியர்’ (Madras Courier) என்ற வார ஏடு 12.10.1785ல் வந்தவற்றுள் ஒன்று. அதன் ஆசிரியர் ரிச்சர்டு ஜான்சன் என்பவர். அவர் கிழக்கிந்திய கம்பெனி ஆதரவுடன் அந்தப் பத்திரிகையைத் துவக்கினார். காரணம், ஹிக்கியைப் போல நம்மால் கம்பெனிக் கொடுமைகளுக்கு ஈடு கொடுக்க முடியாது என்பதால். இதன் ஆசிரியர் ஹியூக் பாய்டு என்பவர். அவர் சில மாதங்களானதும் அதை விட்டு விலகி ‘ஹாரகாரு’ (Harakaru) என்ற இதழைத் துவங்கினார்.

ஓர் ஆண்டு முடிவதற்குள் அதன் ஆசிரியர் காலமாகவே பத்திரிகை நின்று விட்டது. வில்லியம்ஸ் என்பவரால் 1795-ஆம் ஆண்டில் ‘சென்னை கெசட்’ (Madras Gazette) என்ற ஏடும், ஹாம்ப்ரீஸ் என்பவரை ஆசிரியராகக் கொண்டு, ‘இந்தியன் ஹெரால்டு’ (indian Herald) என்ற பத்திரிகையும் வெளி வந்தன.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் கிழக்கு இந்தியக் கம்பெனியின் விசுவாசிகளுக்கே பத்திரிகை நடத்தும் அனுமதியை, அதற்கான பிற சலுகைகளை இங்லீஷ்காரர்கள் வழங்கி வந்தார்கள். அவர்களுக்கு எழுத்துரிமை காக்கும் உணர்வே இல்லை. ஏதோ பிழைப்புக்காகவே பத்திரிகை நடத்துபவர்களாக இருந்தார்களே தவிர, இலட்சியமோ, மக்கள் சேவையோ அவர்களுக்குக் கடுகளவும் கிடையாது.