பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

இந்தியாவில் - இதழியல் கலை! தோற்றம்! வளர்ச்சி! தொண்டு!



வாரன் ஹேஸ்டிங்ஸ் பதவி ஏற்ற பின்பு, 1815-ஆம் ஆண்டில், ‘வங்காள கெசட்’ என்ற பத்திரிகை ஆங்கில வார ஏடாக வெளி வந்தது. இதன் ஆசிரியர் கங்காதர் பட்டாச்சாரியார். இந்த பத்திரிகை ஒரே ஒரு வருடம் மட்டுமே வெளி வந்து நின்றது.

மதக் குழப்பத்தை உண்டாக்கும் சொரம்பூர் கிறித்துவப் பாதிரியர்களின், ‘திக்-தர்சன்’ என்ற வங்காள மாதப் பத்திரிகையும், 1818-ஆம் ஆண்டில் ‘கார்டியன்’ என்ற ஏடும், ‘சமாச்சா தர்பன்’ என்ற வங்க வார இதழும், ‘பிரண்ட் ஆஃப் இந்தியா’ (Friend of india) என்ற இங்லீஷ் மாத இதழும் வெளி வந்தன.

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு, இந்தியர்களுக்கு நாட்டுப் பற்றை உருவாக்கிட ஆலன் அக்டேவியஸ் ஹயூம் எவ்வாறு சுதந்தர உணர்வுக்குத் தந்தையாக விளங்கினாரோ, அதே போன்றே, ‘ஜேம்ஸ் சில்க் பக்கிங்ஹாம், இராசாராம் மோகன்ராய் என்ற இருபெரும் இதழாசிரியர்கள் விளங்கினார்கள். அவர்கள் அந்தக் காலத்திலேயே பத்திரிகை சுதந்தரத்திற்காகப் பெரும் போராட்டக் களம் கண்ட மாவீரர்கள்’என்ற M. Chalapathi Rau, “The Press”, National Book Trust of India, 1974 என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.

இராசாராம் மோகன்ராய் பத்திரிகைச் சுதந்திரத்துக்காக வீதி வீதியாகக் கூட்டம் போட்டுப் பொது மக்களுக்குப் பத்திரிகை அருமையைப் பெருமையாகப் பறையறைந்த பத்திரிகைச் சுதந்தர வீரர் ஹிக்கிக்கு வாரிசாக வாய்த்தவர். இந்து - கிறித்துவ மதவாதிகளின் மமதையெனும் நெருப்பாற்றை நீந்திக் கரை கண்டவர். அவர்களது அருமையான உழைப்புக்களை அறிந்தவர்கட்குத்தான், பத்திரிகை வளர்ச்சி எத்துணைப் பூகம்ப பிளப்புக்களைத் தாண்டி மீண்டு வந்துள்ளது என்ற வரலாற்றருமையை நம்மால் புரிய முடியும்.

இராசாராம் மோகன்ராய் - 1772 - 1883
(Raja Ram Mohan Roy)

ஆன்மிக ஞானிகளும் அறிவியல் வித்தர்களும் தோன்றிய வங்க மாநில பர்த்துவான் மாவட்டத்தில் இராதா நகரம் எனும்