பக்கம்:இதழ்கள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

இதழ்கள்

"ஏன் ராஜா ”

”அம்மா வரமாட்டாளா?” வரமாட்டாள்- துக்கம் தொண்டையை அடைத்தது. ‘n girait-ffr?" “பாப்பாவும் இல்லை.” கீழுதட்டைக் கடித்துக் கொள் கையில் மோவாய் தடுங்கிற்று. தன் மகனை இன்னும் இறுக அனைத்துக் கொண்டான். பாபுவின் குரல் அவன் அணைப் பிலிருந்து அவன் செவிகளுக்கு எட்டிற்று. "அப்பா, அம்மா ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு அம்பிப் பாப்பாவோடு, திரும்பி வருவான்னியே, இப்போ அம்மாவே அரமாட்டாங்கிதியே, இது ஏன்? பதில் சொல்ல முடியாமல் அவன் தகப்பன் மிரள மிரள விதித்துக் கொண்டு தனித்தான். அவன் பார்வை பின்கட்டில் தெரியும் தோட்டத்தின் பக்கம் சென்றது. தோட்டத்தில் சிறு சிறு கால்வாய்கள் பிரவாகித்துக் கொண்டிருந்தன. குட்டைகள் தேங்கி நின்றன. செடியின் உக்சாணிக் கொம்பில் ரோஜாப் பூ, பலவந்தப் படுத்தப்பட்டவனைப் போல், இதழ்கள் கலைந்து கசங்கி, பொலிவிழந்து, அலங்கோலமாய் நின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/108&oldid=1430615" இலிருந்து மீள்விக்கப்பட்டது