பக்கம்:இதழ்கள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இதழ்கள்

§3 இதழ்கள் 'அவன் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளாமலே அவள் மேலே பேசிக்கொண்டு போனாள். "என் நிலையில் இருக்கிறவர்கள் எந்த ஆசையைப்பட்டா லும் உடனே நிறைவேற்றிவிட வேண்டும். இதோ நான் காலையில் உங்களைப் பிரிந்து போய்விடப்போகிறேன். திரும்பி உயிரோடு வருவேன் என்று என்ன நிச்சயம்? அவள் விழிகள் நிறைந்து பளபளத்தன. அஞ்சனா அஞ்சனா! நெருப்பை மிதித்தாற்போல் துடிதுடித்தான். "பிள்ளை பெற்றாயோ, பிறப்பை எடுத்தாயோ என்று பெண்கள் வசனம். என் அம்மா நாளில் இடுப்பு வலி யெடுத்துத் துடித்துக்கொண்டிருப்பாளாம். ஒரு பக்கம் மருத்துவச்சி வத்திருப்பாளாம். இன்னொரு பக்கம், ஐயோ, நேற்றைக்கே கேட்டாயேடி, இந்தா, அப்புறம் தின்ன முடியாதே' என்று ஒரு மாமி திரட்டுப் பாலை உருட்டிக் கையில் வைத்துக்கொண்டு வாயில் ஊட்டப் பார்ப்பாளாம். பின்னாலேயே வெங்காயக் குழம்பில் தோய்த்த அடை விள்ள லுடன் வேறு ஒரு மாமி காத்துக்கொண்டிருப்பாளாம். அம்மா சொல்லும்போது எனக்குச் சிரிப்பாய் வரும். ஆனால் இப்போதுதான் அந்த நிலைமை புரி 'நாயர், இரண்டு கலர் போடு, ஐஸ் போட்டு'மூடியைக் கழற்றியதும் துரையைக் கக்கிக்கொண்டு சோடாவின் பொங்கலும் கண்ணாடித் தம்ளர்களில் இறங்கும் கொந்தளிப்பான கிளுகிளுப்பும், சீறிய வண்ணம் நிறைந்த ஸ்படிகச் சிவப்பும், அதன் மேல் விழிகள் போல் மிதந்த 'ஐஸ் கட்டிகளும்-இப்போது போல் இருக்கிறது. 'அவள் உதடுகள் லேசாய்ப் பிதுங்கித் தம்ளரின் விளிம் பின் மேல் படிந்து அழகாய்ச் சிவந்தன. அவன் அவளையே பார்த்து நின்றான். அவள் உதடுகள் அவ்வளவு அளவாய்ப் பதிந்தன. அவள் இன்பத்தைப் பருகும் இன்பத்தில் ஆழ்ந்த அந்நிலையில் அந்நிமிஷத்திற் குரிய நேரத்தின் சின்னமாய் விளங்கினாள். அதன் மயக்கில் தன்னை இழந்து நின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/68&oldid=1247166" இலிருந்து மீள்விக்கப்பட்டது