பக்கம்:இதழ்கள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

இதழ்கள்

98. இதழ்கள் ஒண்ணு மில்லேம்மா: ஏதோ யோசனையிலிருந்துட் 'ஜட்கா வண்டிக்காரன் ஒரு நாழியாய்க் காத்திண்டுருக் கான்’ என்றாள் பாகீ, குறும்புடன்.

    • &çIribu¡—”

‘போயிட்டுவரேன் அம்மா-' ‘போய் வாம்மா-’’ அவர்கள் நடை தாண்டுகையில் பாபூ அவசரமாய் வாசலி லிருந்து ஓடி வந்தான். "எங்கே போறே அம்மா?" பாபுவின் அப்பாவுக்கு ருத்ராகாரம் வந்துவிட்டது. 'அ-ம்--மா!' 'அம்மா!-’’ "என்னடாப்பா அ ப ரா த ம் பண்ணிப்பிட்டேன் இப்போ?, என்று கேட்டுக் கொண்டே அவன் தாயார் உள்ளேயிருந்து வந்தாள். இவனை நான் வெளியே அனுப்பிவைன்னு சொன் னேனா இல்லையா?”

சொன்னே.”

'இது ஒரு அபஸ்வித்து. சமயத்துலே ஏதாவது கெண் டியாயதமான்னு கேட்டு வைக்கும்னு தானே சொன்னேன்'

  • சொன்னே-’’

'உன்னை ஒத்தரும் சாr)க் கூண்டிலே ஏத்திக் கேக்கலே, அம்மா. நீ பதில் சொல்ற லக்ஷணம் அப்படியிருக்கே.” 'இப்போ என்னை என்ன பண்ணச் சொல்றே?” 'உன்னை ஒத்தரும் ஒண்ணும் பண்ணச் சொல்லல்லே?" சமயத்துக்கு வந்து நிக்கறானே. எங்கே போறே'ன்னு கேக் கறான். பூனைக் குட்டியை மடியிலே கட்டிண்டு நான் சகுனம் பாக்கற அழகு நன்னாருக்கு!” பாகிக்கு அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. பையனை இழுத்து அணைத்துக் கொண்டு திண்ணையில் உட்கார்ந்து விட்டாள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதழ்கள்.pdf/98&oldid=1247196" இலிருந்து மீள்விக்கப்பட்டது