பக்கம்:இதோ ஒரு சீதாப்பிராட்டி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10


பூரணி, கையில் திருமணப் பரிசான குங்குமச் சிமிழுடன் உள்ளே நுழைந்த தும், சொல்லி வைத்த மாதிரி, மேளச் சத்தமும் நாதசுர ஓசையும் டக்கென்று நிற்க, கூடியிருந்த ஆண்-பெண் மத்தி யில், அதிசயமான சலசலப்பும் பயங்கர மான பரபரப்பும் ஏற்பட, அவர்கள் எழுந்து கிற்கிறார்கள் !...

பூரணி, எதிர்பாராத இந்த அவமானத் தின் அதிர்ச்சியைத் தாங்கமாட்டாமல், தலை சுழல, தட்டித்தடுமாறி நிற்கிருள். விளக்கொளி சுழன்றுகிற்கையில், அவள் முகம் வேர்த்துக் கொட்டுகிறது.

எல்லாத் திருக்கூத்தையும் அதிசயத்தோ டும் ஆத்திரத்தோடும் கவனித் து ச் சிந்தனைவசப்படுகிருன் புரட்சிஇளைஞன் முத்து. மெதுவாக எழுங்து கிற்கிருன். அதற்குள், புறப்படத் தயாராகிவிட்ட தன் தந்தையான அருணசல் சேர்வை யையும் கவனிக்கிறன். மனத் தவிப்பு அடங்கிச் சமநிலை அடைந்து, அவன் தன் தந்தையை நோக்கிப் பேசத் தொடங்குகிருன் :

முத்து (பதட்டத்துடன்) அப்பா மனப்பந்தலிலே இந்தப் பொண்ணு வந்து நின்னடியும், டும் டும்"