இந்தியக் கலைச் செல்வம்
எவ்வளவு பெருமை உடையது, எவ்வளவு அருமையானது என்பதைத்தான் இன்றும் நம்மிடையே நின்று நிலவும் கோயில்களும் அங்குள்ள அதி அற்புதமான உருவங்களும் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.
- விண் மறைக்கும் கோபுரங்கள்
- வினை மறைக்கும் கோயில்கள்
- வேறு எந்த நாட்டில் உண்டு
- வேலையின் விசித்திரம்?
என்றெல்லாம் பிறரைப் பார்த்து நாம் கேட்க முடிகிறது. கேள்விக்கு பதில் சொல்லும் பெருமை மற்றவர்க்கு இல்லாத காரணத்தினால் நாம் தலை நிமிர்ந்து நடக்கவும் முடிகிறது.
தமிழ்நாட்டுச் சிற்பக் கலை வளர்ச்சியைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாம் நமது புராதனக் கோயில்களுக்குத்தான் போக வேண்டும்.
சித்திரத்தில் மிக உயர்ந்த
சிற்ப நூலின் அற்புதம்
சின்னச் சின்ன ஊரில் கூட
இன்றும் எங்கும் காணலாம் அல்லவா?
தமிழ்நாட்டுக் கலைகள் எல்லாமே சமயச் சார்புடையவை. ‘போரென்று வீங்கும் பொறுப்பென்ன பொலன் கொள் திண்டோள்’ படைத்திருந்த பண்டைய அரசர் பெருமக்கள் பகையரசர்களுடன் போர் புரியாத காலத்தில் எல்லாம் இக்கலையை வளர்த்திருக்கிறார்கள். பல்லவ மகேந்திரவர்மனும் அவன் மகன் மகாமல்லனும் நமக்கு நன்றாக அறிமுகமானவர்கள் தானே. தந்தை பெரிய பெரிய மலைகளைக்
63