பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழில்களால் பிழைப்பவர்கள் நசித்து விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். தொழில்களின் துட் பங்கள் தெரிந்த இலட்சக்கணக்கான இளைஞர்களும், பொறியாளர்களும் வேண்டும். பல்வேறு தொழில்க ளுக்கும் ஏற்ற பலவகையான இயந்திரங்கள் வேண் டும். ஆலேத் தொழில்களுக்கு அடிப்படையாக விவ சாயமும் சுரங்கத் தொழில்களும் நவீன முறையில் பெருக்கமடைய வேண்டும். திட்டங்கள் சுமார் 2, 000 மைல் நீளமும் அகலமுமுள்ள இந்தப் பெரிய நாட்டில் எங்கு என்ன பொருள் கிடைக்கும் என்ற ஆராய்ச்சியையே புதிதாகத்தான் தொடங்க வேண்டியிருந்தது. நாட்டின் தேவைகள் என்ன, ஏற்றுமதி, இறக்குமதிக்குரிய பொருள்கள் எவை என்ற விஷயங்களேயெல்லாம் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டியிருந்தது. நாடு முழுதிலும் பல திறப்பட்ட தொழிற்சாலைகளை நிறுவி நடத்துவதற்கு நீண்ட கால மாகும். எந்தத் தொழில்களை உடனடியாக நிறுவ வேண்டும்; எவைகளைப் பின்னல் படிப்படியாக நிறுவ வேண்டும் என்ற முறைகளை ஆராய்ந்து, பெருந் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலதனத்தின் அளவையும், அதை அடைவதற்குரிய வழிகளையும் ஆராய்ந்து, திட்டங்கள் வகுத்து, அத்திட்டங்களைக் குறித்த காலத்திற்குள் வரிசையாக நிறைவேற்றி வர வேண்டும் என்று அரசாங்கம் தீர்மானித்தது. இவ் வாறு தோன்றியவையே நம்முடைய நான்கு ஐந்தாண் டுத் திட்டங்களும். பொதுத் துறையும் தனியார் துறையும் திட்டங்களே தீமையானவை, தொழில்களை நடத்த மக்களுக்குச் சுதந்தரம் இருந்தால்தான்.அவை 254