வேண்டியிருந்தது. 1953-இல் அரசாங்கமே அத் தொழிலை மேற்கொண்டு, இரண்டு கார்ப்பரேஷன்களை அமைத்தது : 1. இந்திய ஏர்லைன்ஸ் கார்ப்பரேஷன், 2. ஏர் இந்தியா இன்டர்நேஷனல். இவை அரசாங்க இலாகாக் களில் சம்பந்தமில்லாமல் தனியாக நடந்து வருகின் றன. இவை தங்களுடைய முந்திய சொத்துக்களை மூலதனமாகக் கொண்டு பராமரித்துக் கொள்வதுடன், வெளியில் கடன் எழுப்பிக் கொள்ளவும் அதிகார முடையவை. ஆனல் ரூ. 15 லட்சத்திற்கு மேற்பட்ட மூலதனச் செலவுகளுக்கு இவை அரசாங்க அநுமதி பெறவேண்டும். அரசாங்க ஆடிட்டர் ஜெனரலே இவைகளின் கணக்குகளையும் தணிக்கை செய்வார். விமானக் கட்டணங்களை நிர்ணயிப்பதற்கும் அரசாங்க ஒப்புதல் அவசியம். இந்தக் கார்ப்பரேஷன்களில் ஏர்லைன்ஸ் கார்ப்பரேஷன் சில ஆண்டுகளாக ஆண்டு தோறும் ஒரு கோடிக்குமேல் நஷ்டமடைந்து வந்தது. 1961-62-இல் ரூ. 7,88,000 இலாபம் கிடைத்திருக் திருக்கிறது : 1962-63-இல் ரூ. 81,07,000 இலாபம் எதிர்பார்க்கப்பட்டது. 66 விமானங்கள் ஒடிக் கொண்டிருக்கின்றன. மக்களும் விமான யாத்திரை யில் முன்பிருந்ததைவிட அதிக ஊக்கம் காட்டி வரு கின்றனர். 1947-இல் விமான யாத்திரை செய்தவர்கள் ... 2,50,000 1952-இல் ++ ++ 4,34,480 ... פית 1962-இல் לל தத 15. ... 10,00,000 நிதி உதவிகளுக்குரிய ஸ்தாபனங்கள் : .ே த சி ய உடைமையாக்கப் பெற்ற இந்திய ரிஸர்வ் பாங் கும், 'இந்திய ஸ்டேட் பாங் கும் தொழில்களுக்கு மிகுந்த உதவி செய்ய முடியும். ஆயினும் முதலீடு செய்வதற் கும், குறித்த அளவுக்குமேல் பெருந்தொகைகள் அளிப் 282
பக்கம்:இந்தியா-சீனா-பாகிஸ்தான்.pdf/292
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை