பக்கம்:இந்தியா எங்கே.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

இந்தியா எங்கே?



யர்த்தி, கண்களிலே நம்பிக்கை ஒளி வீச அழுத்தமாகப் பதில் சொல்லுவான். ஆனால் பாவம், ஆயிரம் வேற்றுமைகளில் அல்லற்பட்டு அழியும் இந்தியனோ மங்கிய குரலில் ஒளி யிழந்த பார்வையோடு இதயத்திலே ஒரு பிடிப்புமில்லாமல் 'நானும் ஒரு இந்தியன்தான் என்று இழுத்தபடி கூறுகிறான். அவனுடைய வாய்ச் சொல்லில் வலுவில்லை. உள்ளத்திலே தெளிவில்லை. உடம்பிலே உரமில்லை, கண்ணிலே ஒளி யில்லை. இந்த வீரச் செல்வங்களையெல்லாம் அவனுக்குத் தேடிக் கொடுத்திருந்தால் இன்று இந்தியா உலகிலேயே சிறந்த நாடாக விளங்கி இருக்கும்.

இப்பொழுது காலங்கடந்து எச்சரிக்கை செய்ய முன் வந்திருக்கும் தலைவர்களுக்கு ஒன்று கூறிக் கொள்வோம். பெரியவர்களே! நீங்களெல்லாம் மிக உயர்ந்தவர்கள், ஆனால் இளைஞர்களது எழுச்சிகளைப் புரிந்து கொள்ளத் தவறியவர்கள்! நாடு இன்று இருக்கும் நிலைமைக்கு காரணம் நீங்கள் செய்த அரசியல் தவறுகள்! பொருளா தாரக் குற்றங்கள்! தேர்தல் திருவிளையாடல்கள்! இவை களை இன்று கடைசி நேரத்தில் உணர்ந்திருக்கிறீர்கள். இப்போதாவது உள்ளத் தூய்மையோடு எல்லோரும் ஒன்று சேருங்கள். நீங்கள் கூறுகிறபடி சுதந்திரம் தான் முக்கியம் என்றால், சுயநல வேறுபாட்டால் ஏற்பட்ட கோஷ்டிப் பிரிவினைகள், உட்குழுக் குறும்புகள், பிச்சைக் காரப்புத்திகள், கோபதாபங்கள், குற்ற யுக்திகள் எல்லாம் தீரவேண்டாமா?

எல்லோரும் ஒன்று சேர்ந்தால்தான் இந்தியாவைக் காக்க முடியும்! இல்லையேல், நம்நாடு எத்தனை துண்டு களாகுமோ, யார் யாருக்குகந்தபடி எந்தெந்த நிலையில் எப்படி எல்லாம் அடிமைச் சந்தைகளாகுமோ! துரோகிகளின் கூடாரங்களாகுமோ என்ற அச்சத்தாலும், வேதனைபாலும், வெம்பிக் கருகி உயிர் துடித்துக் கொண்டிருக்கும், ஏழை மக்களின் இதயக் குரலை இனியாவது நீங்கள் கேட்க வேண்டும்! அப்போதுதான் நீங்கள் சொல்வதை அவர்கள் கேட்பார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/14&oldid=983083" இலிருந்து மீள்விக்கப்பட்டது