158
மன்
அதி
மன்
அதி
மன்
அதி
மன்
அதி
மன்
நம் தாய்
இடம் : சோலை காலம் : மாலை
(மன்மத சகாயனும், மற்றோர் அதிகாரியும்)
அதிகாரி! நீ கூறுவது உண்மையா? அடிமையிடம் வருங்கால அரசன், இரவு முற்றும் பேசுவதா! அக்ரமம். நமது பரம்பரை கெளரவத்துக்கு குறைவு தேடும் ஆபாசம். அடிமையிடம் வருங்கால அரசன் மாத்திரம் பேசினால் பரவாயில்லையே. வருங்கால அரசி கூட அல்லவா, ஒயாது பின் தொடர்ந்து பேச ஆரம்பித்து விட்டார்கள். என்ன என் பெண்ணையா குற்றம் சாட்டுகிறாய்? உன்னைக்கொன்று புதைத்து விடுவேன்.
இல்லை. சந்தேகமாயிருக்கிறது. நேற்றிரவு
தோட்டத்தில் பேசியது, உங்கள் பெண் இன்பக்
கொடியைப் போல இருந்ததால் யூகமாகச் சொன்னேன்.
அப்படிச் சொல்லாதே. வாயை மூடு. அவள் அரண்மனையை விட்டு அகலுவதில்லை. ஆம். ஒரு வேளை அடிமையிடம் வேலையிடப் பேசியிருக்கலாமல்லவா?
ஆண் அடிமையிடம் அவள் பேசியிருக்க மாட்டாள். சரி, எப்போது அடுத்த அடிமைக் கப்பல் நம் கரைக்கு வரும்?
அடுத்தத வாரம் அந்த மடையன் பொன்மேனிராயன் அழகி களைப் பிடித்தானா, இல்லையா? அச்செய்தி