பக்கம்:இந்தியா எங்கே.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம்

25


நிறைவேற்றும் சக்தி நமக்கு உண்டாக முடியும். நாம் நமது தியாக ஜோதிகளை வணங்குவது உண்மையென்றால், வீரவழிபாடு செய்வது சத்தியமானால், அவர்கள் வாங்கித் தந்த விடுதலைச் செல்வத்தை எப்பாடுபட்டேனும் காக்க வேண்டிய தகுதிகளை நாம் பெற்றே ஆகவேண்டும்.

எச்சரிக்கை அவசியம்

இது வேகமான அணுயுகம். கொஞ்சம் நாம் ஏமாந்தாலும் போதும். காரியம் கெட்டுப் போகும். உதவி செய்வதிலும், உதவி பெறுவதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். -

ஒன்றுபட்ட இந்நாடு உலகரங்கில் ஒளி வீசி விளங்க வேண்டும். நமது சந்ததிகள் தீரர்களாய் வாழும்படி வளர்க்க வேண்டும்.

நமக்கும் பல பிரச்சினைகள் இருக்கலாம். அதற்காக அந்நியர் மத்தியஸ்தத்தை நாடக் கூடாது. சண்டையோ சமரசமோ நம் தலைவிதியை நாமே தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் சுதந்திரத்தின் ஆரம்பப் பாடம் அமர ஒசை, தன்மான நெடுங்கணக்கின் முதலெழுத்து.

"செப்பு மொழி பதினெட்டுடையாள், எனில் சிந்தனை ஒன்றுடையாள்” என்பதோடு சேர்ந்து வாழும் மனப் பான்மை இந்தியர் எல்லோருக்கும் இதயபூர்வமாக வளர வேண்டும்.

இந்த ஒற்றுமை பண்பாட்டுக்கு விரோதமான ஒட்டைக் காரியங்கள் நாட்டின் எந்த மூலையிலாவது நடந்தால், அந்த மக்கள் மறுபடியும் யாருக்காவது அடிமைப் பட ஆசைப்படுகிறார்கள் என்று தான் அர்த்தம்.

ஆகவே இந்த ஒரு கொள்கையில் நாம் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த ஒரு காரியத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/27&oldid=1509413" இலிருந்து மீள்விக்கப்பட்டது