Ꮾ2
இந்தியா எங்கே?
வீட்டைக் கொளுத்திக் குளிர்காய்ந்தால் - நாளை வெயிலுக்கு யார்நிழல் தந்திடுவார்?
கோடி உயிர்தந்து கொண்ட விடுதலை கோணங்கி நாடகம் ஆடுதற்கா?
வாடும்பயிர் எனஆடும் விடுதலை
வல்லமை பெற்று விளங்கிடுமா?
ஐந்தாண்டு திட்டத்தில்லாபம் என்றோம் - அந்த
லாபம் புகுந்தத யார்வயிற்றில்?
வந்தபலன் எல்லாம் எங்கே தொலைஞ்சுது
வல்லவரே அதைச் சொல்லுங்களேன்!
எந்தவொரு மொழிஆதிக்கம் இன்றியே
இந்தியர் ஒன்றாகத்தானிருக்கோம் இன்று
விந்தைமொழிப் பிடிவாதத்தினால் பல
வீம்புகள் வந்தது யாராலே?
ஊருக்கு உபதேசம் செய்திடுவார் - அவர்
உள்ளுக்குள்ளே பழிவாங்கிடுவார்
யாருக்குமே தெரி யாதென எண்ணியே
ஆளுக்கு ஆள்குழி தோண்டுகிறார்.
வெள்ளைத் துரைக்குப் பதிலாக இங்குக்
கள்ளக்கருப்புத் துரைத்தனமா?
கொள்ளை - கொலைகள் குறைந்ததுவா? குற்றங்கள் வஞ்சனை தீர்ந்ததுவா?
வழிகாட்ட வேண்டிய மூத்தவர்கள்
கைகாட்டி மரமாக நிற்பதுவா?
பழிகாட்டும் வழியிலே ஒடுவதா இந்த
பாரதநாடுபா ழாவதுவா? " -