எஸ்.டி. சுந்தரம் 65
எத்தனைஎத்தனை அநியாயம் - பழி
இத்தனைக்கும் யாரிங்குக் காரணமாம்?
சத்தியமாய் அந்தக் காரணத்தை - இங்கு இத்தினமே காண வேண்டுகிறோம்!
பாலைவனத்திலும் சோலையுண்டு - இந்தப் பாவத்துக் கும்பரி காரமுண்டு!
காலையிலே ஒளி காண்பதுண்டு - நம்மை
காந்தியின் சத்தியம் காப்பதுண்டு :
வீரக்கிழவர்கள்போரில் மடிந்தவர்
வெற்றியின் வீர சுதந்திரத்தைப்
பேரக் குழந்தைகள் சீருடன் காத்திடில்
பெற்றிடலாம் இன்பச் செல்வமெலாம்:
தாரணி போற்றிடும் போரணி வீரர்கள்
தலைமையிற் பெற்ற விடுதலையை
பூரணமாய் இனிப் போற்றியே காப்பது
புத்தியுள்ளவரின் கடமையப்பா
தாதாபாய்வீர லாலா லஜபதி
தியாகத் திலகர் சிதம்பரமும்
நேதாஜிபக வத்சிங் குமரனும்
நெஞ்சுயிர் தந்த சுதந்திரமாம்!
இந்தியத் தாயின் இலக்கணமாம் - தேவி
எங்கள் அன்னைகஸ் துரியம்மா
செந்தமிழ்ச் செல்வி வள்ளியம்மை - உயிர்
தந்ததால் வந்தசுதந் திரத்தை
ஏந்திப்பறக்குது இன்றுநம் கோட்டையில்
இந்தியத்தாய் மணிவீரக் கொடி!