பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை

ஆதரவும் அன்பும் நல்கும் மதுரை மீனாட்சி மில் உரிமையாளர் பெருந்தமிழ்ச் செல்வ வள்ளல் உயர் திரு. கருமுத்து. தியாகராசச் செட்டியார் அவர்களது பெருநலம், புலவர் பாடும் புகழுடையதாகும்”

(புறநா. உரை)

என்று கருமுத்துச் செட்டியாரின் உதவியையும் நன்றியுடன் போற்றுகின்றார். தக்க அறிஞர்களைப் பாராட்டும் பண்பும் உரைவேந்தர்பால் உண்டு!

“சங்க இலக்கியம் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்ற நூற்றொகுதி என்பது இன்று யாவரும் அறிந்தது. நெடுங் காலம் வரை ஏட்டிலிருந்த இவற்றை அச்சேற்றி வெளியிட்ட அறிஞருள் டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் தலையாயவர்”

(கட்டுரை: சங்க இலக்கியத் தனிச்சிறப்பு)

என்று உ.வே.சா. வைப் போற்றுவார்!

உரைவேந்தரின் ‘ஞானவுரை’ நூலுக்கு ஆங்கிலத்தில் ஓர் ‘அணிந்துரை’ வழங்கியர் சி.எம். இராமச்சந்திரஞ் செட்டியாராவர்! அவரைப் பற்றி இந்நூல் முன்னுரையில்,


“சென்னை இந்து அறநிலைய ஆணையாளராய் இருந்து சமயப் பணியும் தமிழ்ப் பணியும் மேன்மையுற்றுச் சிறக்கவும், திருக்கோயில்கள் செம்மையும் தூய்மையும் எய்தி, வழிபாடியற்றவரும் நன்மக்கட்கு வழிபாட்டிலும், திருவருட் பேற்றிலும் உள்ளம் நன்கு சென்று திளைக்குமாறு, பெருநலங் கொண்டு விளங்கவும், ஏற்புடைய பல நன்முறை - களை வகுத்தவரும், தமிழாராய்ச்சியும் சமயப் பணியும் தம் வாழ்வின் உயரிய நோக்கமாகக் கொண்டு ஆராய்ச்சிகள் பல புரிந்து வருபவர் - களுமான சைவத் திரு. ராவ்பகதூர் சி.எம். இராமச்சந்திரஞ் செட்டியார்...!

என்று பாராட்டுகின்றார்.