பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை

13

விளங்கியவர். இவற்றால் 'உரைவேந்தர்' எனப் போற்றப் பெற்றவர்; உயர்பண்புகள் நிறைந்த சீரிய பண்பாளர்; இவ்வகையில் புகழ்ச் செல்வராக வாழ்ந்தவர்!

இத்தகு பேராசிரியரின் வாழ்க்கை வரலாற்றை அறிவதனால், ஒவ்வொருவரும் ‘நற்றமிழுக்கும், நம் அருமைத் திருநாட்டுக்கும் பாடுபட வேண்டும்’ எனும் உயர் எண்ணம் கொள்வர். அதற்கு இந்நூல் பெரிதும் உதவும் என நம்பலாம்.