பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை


               வேட்கையை எழுப்பிக் காதலரை நினைப்பித்தல்
               இயல்பாதல் பற்றிப் ‘புணர்குயில் விளித்தொறும்
               நம்வயின் நினையும் நெஞ்சம்’ என்றும் கூறினான்!”


இவை போல்வன, உரைவேந்தர்தம் உரைகளில் பாக்கக் காணலாம்.


புத்துரை காண்டல்

            “உழுதசால்வழியே உழுவான்பொருட்டு, இழுதை
               நெஞ்சம் இதென்படுகிறதே’ எனத் திருநாவுக்கரசர்
               வருந்திக் கூறியவாறு உழுதசால் வழியே உழுது
               செல்லாமல்... செவ்விய இனிய பழுதற்ற முறையிற்
               பொன்னினும், மணியினும் போற்ற வேண்டுவதாய்
               எழுதியுள்ள உரை விளக்கம் சாலவும் பாராட்டற்
               பாலதாகும்!”

என்று ந.ரா. முருகவேள், புத்துரை, காணும் உரைவேந்தரின் திறத்தை வியந்து பாராட்டுவர்.

        
              “கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி
               பரந்திலங் கருவியொடு நரந்தம் கனவும்
              ஆரியர் துவன்ற பேரிசை இமயம்”

(பதி.11:21-23)

என வரும் பதிற்றுப்பத்து அடிகளுக்குப் பழைய உரைகாரர் “ஆரியத்து ஆணையினாலே பிற விலங்கானும் மக்களானும் வருத்தமின்றிக் கவரிமான் பகற்காலத்துத் தான் நுகர்ந்த அருவியையும், நரந்தம் புல்லையும் கனவிலும் கண்டு மகிழும்” என்று பொருள் கொண்டார்.

இப்பாடலைப் பாடிய குமட்டூர்க் கண்ணனாரின் கருத்துக்குப் பொருந்தாத உரை இது என்று உணர்ந்த உரைவேந்தர், பின்வருமாறு புத்துரை காண்கின்றார்:

             “முருக்க மரங்கள் செறிந்த மலையிடத்தே இரவில்
              உறங்கும்கவரிமான்கள், பகற்பொழுதில் தாம்
              மேய்ந்த நரந்தம் புற்களையும் அவை வளர்தற்குக்