பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உரைநயம் கண்ட உரவோர்

71


சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறையைக் கூடலூர்கிழார் பாடிய ‘ஆடியல் அழற்குட்டத்து’ (புறம், 229) என்ற பாடலுக்கு இவர் தரும் விளக்கம் வருமாறு:

“சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும் பொறையின் இறுதிநாளில் அவன் இறத்தற்கு ஏழு நாட்களுக்குமுன், நாட்டில் புதுமையான நிகழ்ச்சி ஒன்று உண்டாயிற்று. தி நிமித்தங்கள் பல உண்டாயின. அவற்றைக் கண்ட சான்றோருள் ‘கூடலூர் கிழார்’ என்பார் ஒருவர். அவர், வானநூல் வல்லவர் விண்ணிடத்தே ஒரு விண்மீன் தீப்பரக்கக் காற்றால் பிதிர்ந்து, கிளர்ந்து வீழ்ந்தது கண்டார். கார்த்திகை, அனுடம், உத்திரம், மிருக சீரிடம் முதலிய விண்மீன்களின் நிலையினைக் கண்டார். இந்நிகழ்ச்சிக்கு ஏழாம் நாளில், உலகாளும் வேந்தன் உயிர்நீப்பன் என்று உணர்ந்தார். வேந்தன் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை யாகலின், அவற்கு என்ன தீங்கு நேருமோ எனக் கலக்க முற்றார். அவர் கலங்கியவாறே ஏழாம் நாளில் சேரமான் உயிர்துறந்தான் (புறம் 229)

“இப்பாடலில், ‘அழல்சேர் குட்டம்’ என்பது கார்த்திகை நாள். அக்கினியை அதிதேவதையாக உடைமையின், கார்த்திகைக்கு ‘அழல்’ என்பது பெயராயிற்று என்ப. ஆட்டினை, வடநூலார் ‘மேடராசி’ என்பர். ‘ஆடு’ முதல் ‘மீன்’ ஈறாகவுள்ள இராசி பன்னிரண்டுக்கும் ‘அசுவனி’ முதல், ‘இரேவதி’ ஈறாகவுள்ள நாள் இருபத்தேழினையும் வகுத்தளிக்கின், முதல் இரண்டேகால் நாள் ஆடாகிய ‘மேடத்து’க்குரியவாதலின், கார்த்திகை யின் முதற்காலை ‘ஆடியல் அழற்குட்டம்’ என்றார். ‘அனுடம்’ என்பது ஆறுமீன்களின் தொகுதி. அது, வளைந்த பனைமரம்போல் அமைதலின் ‘முடப் பனையம்’ எனப்பட்டது. “வேர் முதலா - அடியின் வெள்ளி. அதாவது முதல் நாள்மீன்; உயரழுவம் - முதற் பதினைந்து நாள்.