பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை

தலைநாண்மீன் -உத்தரநாள். நிலைநாண்மீன் - எட்டாம்மீன் ‘உச்சிமீனுக்கு முன் எட்டாவது மீன்’ அத்தமித்தலும், பின் எட்டாவது மீன் உதித்தலும் இயல்பு. ‘உச்சிமீனுக்கு எட்டாம் மீன் உதயமீன்’ என்ப. தொன்னாண்மீன் - எட்டாம் மீனாகிய மிருக சீரிடம். பாசி - கிழக்குத் திசை; ஊசி - வடக்குத்திசை. பங்குனித் திங்களில் நட்சத்திரம் வீழின் ‘இராச பீடை’ என்பர். ‘ஆடுகயல் தேள் தனுச்சிங்கத் தெழுமீன் விழுமேல் அரசழிவாம்’ என்பர். ‘கயமாகிய குளம்’ என்றது. ‘கயக்குளம்’ என்றார். அஃதாவது ‘புனர்பூசம்’. இது, குளம் போலும் வடிவுடையது.

இது பற்றியே ‘பிங்கலந்தை’யும், ‘அதிதிநாள் கழையா வனமேரி புணர்தங் கரும்பிவை புனர்பூசம் ஆகும் என்று கூறுவதாயிற்று!”

(புறம்:229)

இதனால் உரைவேந்தர், சோதிட நூல் பற்றியும் அறிந்துள்ளார் என்று உணர முடிகின்றது.

அரிய செய்தி கூறுதல்

உரைவேந்தர், பல்வேறு அரிய பல செய்திகளை உரைநூலினிடையிடையே கூறிச் செல்வார். அவற்றில் ஒன்று:

புறநானூறு 358ஆம் பாடலைப் பாடியவர் ‘வான்மீகியார்’. இவரைக் குறித்து உரைவேந்தர் கூறுவது:

“வடமொழியில் இராமாயணம் எழுதிய வான்மீகியார் வேறு; இவர் வேறு! தமிழ் நல்லிசைச் சான்றோராகிய இவர், வடமொழிப் புலவரான வான்மீகியாரது நூலில் பேரீடுபாடு கொண்டிருந்த- தனாலோ, இவர் தந்தையார்க்கு வான்மீகிபால் உண்டாகிய அன்பினாலோ இவர்க்கு இப்பெயர் உண்டாயிற்று எனக் கொள்ளலாம்... வடமொழியில் வல்ல முனிவர் பெயர்களைப் பண்டைத் தமிழாசிரியர் புனைந்து விளங்கினர் என்பது