பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை


பண்டைச் சிறப்பை எண்ணு கிறது. இடை யூறுகளையும் இடையீடுகளையும் போக்கற்கு முயலுகிறது! சுருங்கச் சொல்லின் தமிழகம் பண்டைய தமிழ் கூறும் நல்லுலகமாகும் பணியில் பெரும்பாடு படுகிறது; வாழ்க தமிழ்! வீழ்க பகை! வெல்க தமிழகம்! வெல்க தமிழர்!”

(புறம்:400)

இதனால், தமிழகம் முன்னைப் பழம் பெருமைதனை மீண்டும் நிலைநாட்டத் துடிக்கும் உரைவேந்தரின் உளப்பாங்கினை அறியலாம்!


சொற்பொருள் நயங்காண்டல்: அம்சொல் நுண்தேர்ச்சிப் புலவர்

சொல்லழகும் பொருளழகும் என்ற அழகு அமையச் சொல்லுதலும், பிறர் சொல்வனவற்றின்கண்ணும் நூலின்கண்ணும் ஆழ்ந்து கிடக்கும் நுண் பொருளைத் தேர்தலுமுடைய புலவர்.

விதுப்பு

வேட்கை மிகுதியால் உள்ளத்து எழும் விரைவுத் துடிப்பு; அது, கட்பார்வையிலும் சொற்செயல்களிலும் மெய்ப்பட்டுத் தோன்றும்.

காலன்

உயிர்கள் அவைநின்ற உடம்பினின்று நீங்குதற்குரிய காலம்பார்த்து நீக்கும் இயல்பு பற்றிக் கூற்றுவனைக் காலன் என்ப.

அவினாபாவம்

விட்டு நீங்காத் தன்மை மட்குடத்துக்கும் மண்ணுக்குமுள்ள இயைபு போல.

ஆரியன்

அரியவன். இது, தமிழ்ச்சொல். ‘வடசொல்’ என வாய் வதறுவாருமுளர்.