பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உரைநயம் கண்ட உரவோர்

81


இவ்வாறே சிவஞானமுனிவர், பல்வேறிடங்களிலும் வட சொற்களை ஆள்வர். அவற்றிற்கெல்லாம், உரைவேந்தர் விளக்கம் தந்து செல்வர்.

‘அவினா பாவம்’, ‘அருத்தாபத்தி’, ‘புனருற்பவம்’ ‘பிரவாகா நாதி’ முதலான பல்வேறு வடசொற்கள் வருகின்றன.

அவினா பாவம்-விட்டு நீங்காத் தன்மை; மட்குடத்துக்கும் மண்ணுக்குமுள்ள இயைபு போல. (ப.19)

அருத்தாபத்தி-பகலுண்ணான் சாத்தன், பருத்திருப்பான் என்ற - வழிப் பருத்திருத்தற்கேதுவாய உணவுண்டல், இரவில் நிகழ்கிறதெனத் துணிதல். அதுபோல, உடற்குஇட்ட பெயரால் அழைக்க, உயிர் விடையிறுத்தற்கேதுவாய அபேதக் கலப்புண்மை துணியப் படுகிறது.(ப.44)

புனருற்பவம் - மீளவும் படைத்தல்.(ப.52)

பிரவாகாநாதி - பிரவாகம் போல அநாதி. ஓடுகிற தண்ணீரில் ஓட்டம் இருப்பினும், தண்ணீர் நிலையாய்க் காணப்படுவது போல, வினை செயப்பட்டும் நுகரப்பட்டும் வரினும் இடையறாது உளதாதல்.(ப.67)

இவ்வாறு உரைவேந்தர் கூறும் விளக்கங்கள் மிகப் பல எனலாம்.

‘தொல்காப்பியம்’ போன்ற இலக்கண நூல்களில் மிக்க புலமையுடையவர் உரைவேந்தர் என்பதற்கு, இச் ‘சிவஞான போத மூலமும் சிற்றுரையும்’ என்ற பதிப்பு சான்று பகரும். இங்கே சில மட்டும் சுட்டப்படுகின்றன:

“சொற்பொருட்பின்வருநிலை’ எனச் சிவஞானமுனிவர் கூறிய போது,

               “முன்வரும் சொல்லும் பொருளும் பலவயின்
                பின்வரும் என்னில் பின்வரு நிலையே”

(தண்டிசொல். 63)

என்றும் (ப.35):

‘பண்ணை என்னும் ஐகாரம், ‘பகுதிப்பொருள் விகுதி’ என முனிவர் கூறிய இடத்தில்,

               
               “ஐகாரம், பண் என்னும் சொல் இறுதிக்கண் நின்று
                அச்சொற் பொருளையே உணர்த்திற்றாதலால்,
                பகுதிப் பொருள் விகுதி எனப்பட்டது. முன்னர்,