இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உரைநயம் கண்ட உரவோர்
83
“இன்றி என்னும் வினையெஞ்சு இறுதி, நின்ற
இகரம் உகரமாதல்,
தொன்றியல் மருங்கின் செய்யுளு ளுரித்தே’
(தொல், எழுத்து.உயிர் மயங்கு.35)
“சித்தாந்த நெறியுணராதார், அருளாகிய மெய்ப் பொருளை நோக்கும் விதியுடையாரல்லாதலின், அவர்க்கன்றி ஏனை யோர்க்கு விளங்காது என்றார். ‘அவனருளாலே கண்ணாகக் காணினல்லால்’ என நாவரசரும்; ‘அவனருளாலே அவன்தாள் வணங்கி’ என மணிவாசகரும் அருட் கண்ணுடையராய் உரைத்தருளுவன காண்க!”
(ப.162)
என்றும், உரைவேந்தர் கூறும் நயவுரைகளும், இலக்கண மேற்கோள்களும் எண்ணில் பலவாம். இந்நூல் குறித்து மிக விரிவாக ஆராய்வதற்கும் இடனுண்டு!
உரைவேந்தரின் நூல்களனைத்தையும் ஆராய்ந்தால், மேலே கூறியன தவிர மேலும் பலவற்றை நோக்கலாம். அவையெல்லாம் தனித்தனியாக ஆய்வு செய்தற்குரியன.