பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/85

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை


பொருள் நிலையில் மிக்க சிறப்புற்றிருக்கும்’ என்று என் நண்பரொருவர், என் சங்க நூல் வெளியீடுகளை நோக்கி, என்பால் கொண்ட உண்மையன்பினால் கழறிக் கூறினார். பொருள்நிலை நோக்கி, அவர் கூறிய பொருளுரை உண்மையுரையே; அதனை எண்ணி ஒருகால் உள்ளம் அலையினும், பிற எக்காலத்தும் இந்த இனிய தமிழ்ப் பணியிலே அதனை உறைப்புற்று நிற்பித்து இதனை இவ்வளவில் முற்றுவித்த தமிழ்த்தாயின் தண்ணிய திருவருளையே வியந்து பரவுகின்றேன்!”

என்று உரைவேந்தர் கூறுகின்றார் (புறநா.முன்னுரை) எனின், இவர்தம் தூய தமிழ்ப்பற்றின் திண்மையை என்னென்பது?

உரைவேந்தர், தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டது அன்னைத் தமிழுக்குச் செய்யும் அருந்தொண்டு என்பதேயாம்.

“சுமார் நாற்பது ஆண்டுகட்கு முன் யான் தமிழறிவு ஓரளவு பெற்றுப் பழந்தமிழ் இலக்கியங்களைப் பயின்று இன்புற்ற காலை, சில நூல்கள் குறைவுற்றி ருந்தமை கண்டு, எங்ங்ண மேனும் முயன்று நிறைவு செய்வது, தமிழன்னைக்குச் செய்யத் தக்க பணி யென்ற கருத்தை உட்கொண்ட- தோடு, அதனையே என் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டேன்!”

என்று இவர் கூறுவது (நற்றிணை முன்னுரை) மனம் கொளத்தகும்.

தமிழ்நாட்டைப் பற்றியும், தமிழினத்தைப் பற்றியும், தமிழைப் பற்றியும், ஒல்லும் வாயெல்லாம் ஓயாதுரைப்பது இவர்தம் இயல்பு! இங்கே சில காட்டலாம்:

“சங்ககாலச் சோழபாண்டியர்க்குப் பின், தமிழ்நாடு ‘களப்பிரர்’ என்ற இனத்தவரின் கைப்பட்டுத் தன் சீரும் திருவும் இழந்து சமழ்ப்புற்றது. வேற்றுமை மாசின்றி ஒருமைச் சமுதாயமாய்க் கடற்கு அப்பாலுள்ள மேலைநாடுகளும், கீழைநாடுகளும்