86
4.
இந்திர மோஹனா
நரபதிசபை தன்னிலே நாட்டியம் செய்யவந்த
[எம்மை
(எழுந்து வேறு விதமாய் நடித்துக்கொண்டே பாடுதல்.) (நோட்: சங்கராபரணம்.)
ஸக்கபா பமகமரீ நிரீம கமரிகஸா பாஸாகா மகரிஸநீ
ஸரிகமபா தநிஸா
பஸாஸ ஸ்தபமகா மாததா நிதபமபா
நிந்நிந்நீ பந்நிந்நீ பாஸஸா பரியீ
நிரிகரி கரிநிபநீ பாநீரிநிநிரி பகபா
கபஸாஸா நிஸகரிகஸா ஸநிபமகா பமகரிஸநி.
(ஸ)
(மேற்சொல்லிய நோட்டிற்கு ஒட்டி அதேமெட்டு சாஹித்யம்.)
சந்திரபுரி தன்னில் செங்கோல் செலுத்திடும் எங்களரசரை ஏற்றிப் பணிந்தோம்.
என்றும் புகழ்பெற்று நீடூழிகாலமும் ஜே ஜே ஜே யென்கிற கரகோஷத்துடனே முன்னம் நோவாமலே மன்னர்க்கதிபதியாக மாநிலந்தன்னிலே மாண்புறவாழ்கவே.
சந்திர.
குண:- மந்திரி ! இந்நாட்டியப்பெண்கள் வெகு திறமை யாய் நடிக்கின்றார்கள். நீர் உடனே போய் சித்ராவையும் மோஹனாவையும் இந்நாட்டியத்தைப் பார்க்க அழைத்துக் கொண்டுவாரும். சபையிலிருக்கும் அன்னியர்களை வெளி
யில் போகச்சொல்லும். ராணியார் வரவேண்டும்.
சபை
மந்திரி: சித்தப்படியே இதோ செய்தேன். யோர்களே! பட்டமகிஷி வரவேண்டும். அன்னியரெல்லோ ரும் தயவுசெய்து வெளியில் போகவேண்டும்.