இந்திர மோஹனா
87
சபையோர்:-ஆஞ்ஞைப்படியே(அரண்மனையில் மாமூ
லாயிருப்பவர்கள் தவிர மற்ற எல்லோரும் நிஷ்க்ரமித்தல்.
மந்திரியும் போதல்.)
குண. பேஷ். வெகு நன்றாயிருக்கிறது.
நாட்டியப்பெண்கள்:-
(விமலகமல என்ற பார்சி மெட்டு.)
அகிலபுவனரக்ஷிதனே சகலர்புகழும்
ஆதிமூலமே உன்னை
அ
நம்பிப்பணிந்து போற்றுகின்றோம் நளினமலர்நாயகனே
ஆதரித்தருளவேண்டும் மோஹனாங்கமுரளி
கானஞ்செய்யும் கமலக்கண்ணா காக்கவேணும் ஆதிமூலமேயெம்மை.
(நேபத்யத்தில்)
அ
ஐயோ! அநியாயமே. இதென்ன இது! எங்குநடக்கும்? குண:-(செவிசாய்த்து ஆத்மகதமாய்) ஆ ! இதென்ன கூச்சல்! அநியாயம் என்று கூவுகிறார்களே. எங்கு என்ன அநியாயம் நடந்து விட்டது? மோஹனாவை யழைத்துவர அனுப்பிய மந்திரி ஏன் இன்னும் வரவில்லை. (மறுபடியும் நேபத்யத்தில்) ஐயையோ! முழுகிப்போய்விட்டதே. நாளைக் குக் கலியாணமாயிற்றே.
குண: (திடுக்கிட்டு ஆத்மகதமாய்) ஒ ! நமது அரண் மனையில்தான் என்னவோ நடந்திருக்கிறது. (உற்றுநோக்கி) அதோ யாரோ வருகிறாளே.
என்ன
சித்: (பரபரப்போடு பிரவேசித்து) ஐயோ ! நாட்டியம் வேண்டியிருக்கிறது. அந்தத் தடிச்சிறுக்கி செய்த வேலையைப் பாருங்கள்.