இந்திர மோஹனா
105
மனம் நிலைக்காது. ஆ! மோஹனா ! மோஹனா ! (மறுபடியும் மூர்ச்சித்து விழுகிறான்.)
சித் - (தனக்குள்) ஐயோ! இந்தக்கிழம் எப்போதும் மோஹனாவென்று பிதற்றுகிறதே. இனிநான் என் செய் வேன்? பாவி சாணக்கியனாலேயே இப்படியாயிற்று. அவன் காசமாய்ப்போக. (கைவிரலை நெட்டிமுறிக்கிறாள்.)
வி தூ: (ஏளனமாய் நகைத்துக்கொண்டு) உம். யாரை வைது என்னபயன் ? ஆராய்ந்துச்செய்யாதது தீராத்துயராய் முடிந்தது. இனி என் செய்வது?
சித்திராங்கி வெட்கித் தலைகுனிந்து நிற்க திரைவிழுதல்.)
இரண்டாவது களம் முற்றிற்று.
மூன்றாவது அங்கம். மூன்றாங்களம்.
இடம்: காடு.
காலம்: மாலை.
மோஹனா:- (மெலிந்த நடையுடன் பிரவேசம்.)
" போரேனிதோ போரேனிதோ" மெட்டு).
போரேனிதோ போரேனிதோ.
பரதேசியாய்ப் போரேனிதோ
காக்கவேணும் கருணாநிதே
கானத்தில் செல்லும் என்னை
பாரேன்இனி என்னையனை
பற்பல அரசர்போற்றும்
மன்னன்வயிற்றில் பிறந்தும்
மனந் தவிக்கலானேனே.