பக்கம்:இந்திர மோகனா.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




110

இந்திர மோஹனா

(ஐயையோ ஜானகியே யென்றமெட்டு) ஐயோ நானென்ன செய்வேன் - பாழும் கள்ளர்கள் என்னைத் தூக்கிச்செல்கின்றாரே வையகந்தன்னிலே வேந்தன் வயிற்றிற் பிறந்து வெறியர் தூக்கலானேனே.

ஆபத்துக் காலத்தில் அணைக்க ஒருவருண்டோ பேதையென் தனக்கு.

ஆ! ஜகதீசா ! எங்கோ தூக்கிச் செல்கின்றார்களே ! திமிறிச் செல்லவும் கூடாமல் கெட்டியாய்ப் பிடித்துச் செல் கிறார்கள். ஐயையோ! என் செய்வேன் ஈசா!(திரைவீழ்தல்.) மூன்றங்களம் முற்றிற்று.

மூன்றாவது அங்கம். நான்காவது களம்.

இடம் - காட்டில்திருடன் வீடு

காலம் - இரவு.

(மோஹனா வீற்றிருந்தபடி பிரவேசம்.) ராகம் - நீலாம்புரி.

காரிருள் தன்னில் யானும் கலங்கியே நிற்றலேனோ ஆருளர் களைகணம்மா அரங்கனே அருளுவாயே பாரினில் உன்னையல்லால் பற்றெனக்கொருவருண்டோ சோரர்களிடத்தினின்றும் துணையுறத்தப்பவைப்பாய்.

மோஹனா:- கருணாகரா ! சிற்றன்னை விளைவித்த அல் லலைப் பொறுக்கமாட்டாமல் உயிரை விட்டுவிடலா மென்று வெளிவந்தால் இப்போது திருடன்கையில் அகப்பட்டு சசிக்க முடியாத கஷ்டங்களை யனுபவிக்க வைத்தாயே ? இது நின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/127&oldid=1559595" இலிருந்து மீள்விக்கப்பட்டது