126
ந்திர மோஹனா
"நந்தன் சரித்திர மானந்தம் "மெட்டு.
ராகம்: சங்கராபரணம். தாளம்: ஆதி.
நாதா மறுமொழியும் சொல்லலாகாதா இந்தவேளை தகாதா உங்கள் தாளைப்பணிய என்தன்
பாத கமலந் தன்னை நாடி வனந்தன்னிலே தேடி ஈசனைத் துதிப்பாடி உம்மை யடைய
(நா)
(நா)
பிராணநாதா ! ஒரு வார்த்தை சொல்லி
என்மேல்
கருணை கூர்ந்து காக்கலாகாதா?
ராகம்: ஸ்ரீரஞ்சனி.
ஜீவ:-வானவர் புகழ் மங்கையே
கண ண !
கானகந் தனிலிங்ஙனே
ஊனமற்ற நின் செங்கையை
நானு மொப்புவல் நங்கையே.
உன்னைக்கண்டதும் என்னாவியையே
உனக்குத் தத்தம் செய்துவிட்டேன்.
இனி உன்னைத் தவிர
வேறொரு ஸ்த்ரீயைக் கண்ணெடுத்தும் பாரேன். இது சத்தி யம்.(ஆலிங்கனம் செய்து கொள்கிறான்.)
மோஹனா:- பிராணநாதா! இன்றே நான் செய்த சப தம் நிறைவேறிற்று. நான் பெண்ணாய்ப் பிறந்ததின் பலனை யடைந்தேன். என் மாற்றாந்தாயின் சொல்லை மடித்தேன். நாதா! அஸ்தமன காலமாய் விட்டதே.
ஜீவ:- கண்ணே ! என்னை நீ எந்த நந்தவனத்தில் கண்டு காதலுற்றாப்? உன் சபதம் யாது?
மோஹனா:- ஒன்றையும் விடாமல் சொல்கிறேன். முதலில் இருட்டுவதற்குள் ஏதாவது ஒருகிராமத்தை யடைய வேண்டும். இத்தனை நாள் காட்டில் அலைந்தது போதும்.