பக்கம்:இந்திர மோகனா.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




130

இந்திர மோஹனா

நித்:- ஏான் சொல்லுகிறபடி செய்; மன்னிக்கிறேன். இந்த அறையின் கதவைத்திற. (சரசன் கதவைத்திறக்க, யோகி உள்ளே சென்று பத்பநாபரைத்தட்டி யெழுப்பி) மன் னரே! எழுந்திரும். உமது கஷ்டம் இன்றோடு தொலைந்தது. உம்மைச் சிறைவைத்த பாவி மாண்டானென்று நினையும். சீக்கிரம் எழுந்திரும். உமது நாட்டை அடைவோம்.

பத்ம: (மெதுவா யெழுந்து) இச்சண்டாளனிடமிருந்து என்னை மீட்க வந்த மாமுனிவரே! நமஸ்கரிக்கின்றேன். (கா லைப்பிடிக்கப் போகையில் யோகிகள் தடுத்து)

போதும்.

நித்:- மன்னா! நமஸ்கரிக்கின்றேனென்று சொன்னால் நான் ஏற்றுக்கொண்டேன். நேரமாகிறது. புறப் படும். போவோம். (சரசனைப் பார்த்து) பிரதானி ! சீரும் என்னுடன் பத்மபுரிக்கு வாரும். (நால்வரும் போகிறார்கள்.) இரண்டாவது களம் முற்றிற்று.

தான்காவது அங்கம். மூன்றாவது களம். இடம்:- தேவகியின் அந்தப்புரம்; காலம்.இரவு.

(தேவகி சோகத்தோடு பிரவேசித்தல்.)

தேவகி:ஹா!மைந்தா!

ராகம்: காபி: ஏகதாளம்.

பொறுக்குமோ ஐயையோ என் தனுயிர் தரிக்குமோ மகனே - பொ- செல்வனே-பொ-சுதனே - பொ அரவிந்தா என்தனுயிர் தரிக்குமோ ?

வசனம் ஷ ராகத்தில்

பட்டம்கட்டிப் பாவியேன் கண்டுகளித்து உன்னைக் கட்டியணையக் கோரிய ஜெஞ்சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/147&oldid=1559615" இலிருந்து மீள்விக்கப்பட்டது