136
இந்திர மோஹ்னா
தேவகி:- சிச்சீ! வாயைமூடு.என்நாதர் வந்தால் உன்னை வெட்டி வீழ்த்துவார். மரியாதையாய் ஓடிவிடு.
கலிங்கன்:- உம். என்னாசைக்கண்ணாட்டி! உன் நாதனா என்னை வெட்டுபவன்? இதோ இக்கிரீடம் யாருடையது பார்? உன்னை யடையும் பொருட்டு உன் மைந்தனையும் மன்னனையும் கொன்றேன். இனி என்னைத்தவிர உன்னைக்காக்க வேறொரு வருமில்லை.
தேவகி: (கிரீடத்தை உற்றுநோக்கி) ஹா ! இது என் மன்னனுடையதே. ஐயோ! அவரையும் இழந்துவிட்டேனா? ஆ! பிராணநாதா! (கீழே விழுந்து புலம்புகிறாள்.)
66
(தில்லையம்பல ஸ்தல மொன்றிருக்குதாம் மெட்டு.) 1.என்ன செய்வேன் ஏதுசெய்குவேன் - ஈசனே ! மன்னனும் மடிந்தாரென்றானே.
2. ஐயையோ என்னாவி துடிக்குதே - என்னையனே ! வையகத்தில் பாவியானேனே.
3. மாரியில்லாப் பயிர் போலானேனே-மகனே ! வாரில்லாத மேளமானேனே.
4. திரை புரளும் கருங்கடல் தன்னில் - துரையே! கரைகாணாமல் கலங்கி நிற்கின்றேன்.
கலிங்கன்:- அன்பினுருவே! ஆசைக்களஞ்சியமே ! ஆண்டாண்டு தோறும் அழுதுபுரண்டாலும் மாண்டார் வருவரோ " என்றபடி போனவர்களைப்பற்றி இனி புலம்பி யாது பயன்? நான் இருக்கும் வரை உனக்கு ஒரு குறைவு மில்லை. என் கருத்துக்கு இசைந்துவிடு. (அவளை ஆலிங்க னஞ் செய்யப் போகிறான்.)