இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இந்திர மோஹனா
(:)-
முதல் அங்கம். முதற்களம்
இடம்:- சந்திரபுரியில் நந்தவனம்.
காலம்:- மாலை.
(மோஹனா பாடிக்கொண்டே ப்ரவேசம்.)
ராகம் - ஸஹானா : தாளம்-சாபு.
1. ஏனோ என்னைப்படைத்தாய்
ஏ ஜகதீசனே
அவனிதனில் பாரமாய்
2.
சிற்றன்னை மொழியாலே சிறுமைப்படவோ ஈசா ! சிறுமியான் ஜனித்தது நெஞ்ச முருகவோ !
கானாற்று வெள்ளம்போற் கண்ணீர் பெருக்கியே கலங்க வைத்தாயோ ஈசா !
(a)
வானோர் புகழ்தக்க வலியோனைக் கண்டென் உடல்பொருள் ஆவியை ஒப்புவிக்க வைத்தாயோ! 3. பெற்றதாயை யிழந்த பேதையாகிய யிந்த அடியாளைக் காத் தருள்வாய்
உரியோனிடந்தன்னில் பரிவுடன் சேர்ப்பிக்க
ஈசா ! உன் அங்கிரியைப் பணிந்தேன் மோஹனாங்கி ஆ! ஜகதீசா! என் தலைவிதியை என்னென்று சொல் வது ? ஆறாத்துயரத்தை இளவயசிலேயே நீ ஊட்டினாய். தாயை யிழந்த துக்கம் தணியா திருக்க, இக்கொடிய மாற்றாந்