பக்கம்:இந்திர மோகனா.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

இந்திர மோஹனா

விதூஷகன் - யாருக்கா? யாருக்கென்று சொல்லும் இள

வரசியம்மாளுக்கே.

பாட்டு.

கண்ணாளத்திலே (நிறுத்திவிடல்)

மோஹனா- என்ன இது? உமக்கு ஏதாவது பைத்தி யமா என்ன? எனக்குக் கலியாணமாவது, எனக்குத் தெரியா மல் எப்படி நடக்கும். அதிருக்கட்டும். என்னை யாருக்குக் கொடுப்பதாக நிச்சயித்திருக்கிறார்கள்? உமக்குத் தெரியுமல் லவா, அதைச் சற்று சொல்லும்.

விதூஷகன் -

ஷை பாட்டு.

அந்தக் கட்டழகன் சாணக்கியனை

இந்த கட்டழகி கண்ணாலம் கட்டிகச்சலே மறந்துடா தெங்கோ.

சொந்த கண்ணாலத்திலே

ஜொகுசு கண்ணாலத்திலே

என்னைக் கொஞ்சம் மறந்துடா தெங்கோ.

மோஹனா- போதும், போதும். நிறுத்தும். அந்த முண்டத்தையா நான் மணப்பேன் !

விதூஷகன்-அம்மா! நீங்கள் என்னமோ பிகுவாயிருக்கி றீர்கள். விவாகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் ஆய்

விட்டன.

பந்துக்களும் எல்லோரும் வந்து விட்டார்கள். ஆகையால் என்பங்கு ஆமவடை நினைவிருக்கட்டும்.

மோஹனாஎன்ன ! யார் யார் வந்து விட்டார்கள்? நீர் சொல்வது எனக்கு விந்தையா யிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/27&oldid=1559493" இலிருந்து மீள்விக்கப்பட்டது