பக்கம்:இந்திர மோகனா.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

தட்டிலிருக்கும் ஆம வடையை தட்டி கொட்டித் தின்னலா மடி ! பச்சை மிளகாய் பரிமளமும் கொத்தமல்லி வாசனையும் இஞ்சியுடைய யேற்றமும்

தயிரினுடைப் புளிப்பும் பெண்ணே! என்ன ஜோர் பலே பலே

என்ன ருசி பேஷ் பேஷ் - தில்லாலே.

13

இப்போது தெரிந்ததா ஆமவடையின் பெருமை ? அப்பாடா ? அந்தப் பேரைச் சொல்லும் போதே என் வாயில் ஜலம் ஊறு கிறது.

சா:-பேஷ், உம்மைக் கலியாணம் பண்ணிக்காமல் நான் இருப்பேனா ? நீர் சீக்கிரம் போய் தாம்புக்கயிறு திரிக்கச் சொல்லி, தட்டானுடன் தாலி பண்ணச் சொல்லும்.

வி:-அம்மாடி! என் வயிற்றில் பால்வார்த்தாயே. இதோ

போகிறேன்.

(பாடுகிறான்).

தோடி ராகம்

ரூபகதாளம்.

பப்பளிக்காய் பொருச்சுக் குழம்பு பணத்துக் கொன்னு ரெண்டுமூணு

நாலஞ்சா றேழெட் டொன்பது கரண்டி

அதிகருசி மிகுதிபசி நிறையபுசி மறையவசி

புசித்தவர் களெல்லாம் பிறர் தனைக் கண்டால்

(~)

தோம் தோம் ததிங்கண தோம் திம்திம் என்றாடுவர் (ப)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/30&oldid=1559496" இலிருந்து மீள்விக்கப்பட்டது