பக்கம்:இந்திர மோகனா.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

19

யரமதயாளா பக்தவத்ஸலா

அனுபல்லவி.

பாரில் உன்னை நம்பிப்பணிந்தேன் மோஹனா

(க)

(இருவரும் நிஷ்க்ரமித்தல்)

முதற்களம் முற்றிற்று.

முதல் அங்கம். இரண்டாவது களம்.

இடம்:- பத்மபுரியில் தேவகியின் அந்தப்புரத்தின் வெளிப்

பக்கம்.

காலம்:-பகல்.

(விமலா நின்று கொண்டிருக்க ஜயசீலன் வெகு பரபரப்புடன்

பிரவேசித்தல்.)

ஜயசீலன்:-விமலா ! ராணியார் எங்கே? ராணியார் எங்கே? சீக்கிரம் சொல்.

விமலா :- என்ன எஜமான் இவ்வளவு அவசரமாய்க் கேட்கிறீர்கள்? ஏதாவது விசேஷமுண்டா?

ஜய: விமலா ! நீ இதையெல்லாம் இப்போது என்னைக் கேட்காதே. ராணியாரிருக்குமிடத்தைச் சீக்கிரம் சொல். விமலா:- தாங்கள் சொல்வதைப் பார்த்தால் எனக்கு அதிக திகிலாயிருக்கிறது. என்ன சமாசாரம்? என்னிடம்

சொல்லக்கூடாதா?

ஐய:- நான் என்னவென்று சொல்லுவேன். நினைக்கும் போதே என்னாவி தவிக்கிறது, நாவெழவில்லை. என் செய் வேன்? ஹா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/36&oldid=1559502" இலிருந்து மீள்விக்கப்பட்டது