36
இந்திர மோஹனா
மோஹ:- அதுதான் எனக்கும் தெரியவில்லை. இன்று காலையில் நான் எழுந்தவுடன் தட்டோடு, அம்மா கொடுக்கச் சொன்னதாய்,தரங்கவதி வைத்துவிட்டுப்போனாள்.
சாகரீகா! ஏதோ காலோசை கேட்கிறது. யார் வருகி
றது, பார்.
சாக:- (திரும்பிப்பார்த்து) அம்மா! தங்கள் தந்தையும் சிற்றன்னையும் வருகிறார்கள்.
(குணசேனனும் சித்ராங்கியும் பிரவேசித்தல்.) மோஹ:-(அதிவிரை வாயெழுந்து) வாருங்கள், அப்பா ! வந்தனம், சிற்றி ! நமஸ்காரம் (ஆசனத்தைக்காட்டி) இதில் அமருங்கள். (இருவரும் உட்காருகிறார்கள்.)
குணசேனன்:- கண்ணே மோஹனா ! இப்படி என் பக்
கலில் உட்கார்.
மோஹ:- அப்பா! இதோ உட்கார்ந்தேன். (அமருதல்). ஏது தாங்கள் இங்கு வந்தது! என்னையழைத்தால் வந்திருப் பேனே. தங்களுக்கேன் இந்த சிரமம் ?
குண:-அதெல்லாம் ஒன்றுமில்லை. உன்னிடம் ஒரு முக்யமான சமாசாரத்தைப்பற்றிக் கேட்கவேண்டுமென்று வந்தேன். அதற்குச் சரியான விடை சொல்லவேண்டும்.
சித்ராங்கி:- கேளுங்கள். இந்த உபசாரவார்த்தையெல் லாம் எதற்கு?
கள்.
மோஹ:- அப்பா ! அப்படியே சொல்கிறேன் கேளுங்
குண - பெண்ணே ! உன்னைச் சாளுவதேசத்தரசன்
மகன் சாணக்கியனுக்கு மணம் புரிவிக்க ஏற்பாடு செய்திருக்