பக்கம்:இந்திர மோகனா.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

இந்திர மோஹனா

நம்மையே நாட்டைவிட்டு ஒட்டிவிடுவாள். பெட்டைக்கு இவ் வளவு அதிகாரமா? வெகு அழகு.

குண:- பெண்ணே ! மோஹனா! உனக்கு விவாக காலம் ஆயிற்றா இல்லையா என்பது என்னைவிட உனக்கு அதி கமாய்த் தெரியுமா? 16 வயதான பெண்ணை மணஞ்செய் யாமல் வைத்திருப்பது எனக்கு அடுக்குமா? உன் சொல்லை நான் கேட்கமாட்டேன். செய்து தான் தீருவேன்.

மோஹ :- ஐயனே! தாங்கள் என்னை என்ன செய்தா லும் சம்மதம். இப்போது விவாகம் மாத்திரம் வேண்டாம். (காலைப் பிடித்துக்கொண்டு), தயவு செய்வீரென்று நம்புகி றேன்.

(ஆறுமுகவடி வேலவனே யென்றமெட்டு)

முன்னம் ஒவ்வாத கடிமணஞ் செய்வது

ஐயனே உமக்கழகோ - இந்த

சின்னஞ் சிறுமியின் சிந்தை நோவாமலே

காத்தருள வேணும்.

உம்மையல்லால் வேறு திக்கெனக்கு முண்டோ என்னருந் தந்தையரே-நீர் செம்மையுடனே நான் செப்பு மொழி கேட்டு நிறுத்துவீர் என் ஐயனே!

குண:- (கோபத்தோடு காலை உதறிக்கொண்டு) பிலஹரி ராகம். சாபு தாளம்.

தக்கவரன்றனைத் தான் போக்கிக் கொள்கிறாய் பெண்ணே மோகனாங்கியே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/55&oldid=1559522" இலிருந்து மீள்விக்கப்பட்டது