64
இந்திர மோஹனா
அநுபல்லவி.
நீதியிலில்லா வழக்கம் நீர்செய்து கொள்கிற பழக்கம் எந்த ராஜருக்கது முழக்கம் இந்தக் கடிமணம் செய்வது
அடுக்கும்
சித்:- பேஷ்! பேஷ்! நிரம்ப நன்றாயிருக்கிறது,
ராகம் மோகனம்.
()
போதுமே சிறுக்கி உன்றன் புல்லிய மொழியாலிங்கு வாதுகள் பேசவேண்டாம் வகையிலா மூடமே நீ தீதுகள் செய்தேனென்று துணிவுடன் செப்பியே நற் சாதுவைப் போலேயிங்கு சாற்றுகின்றாய் துஷ்டி மூரி! மோஹனா :- (கண்ணில் நீர்வடியத் தந்தையைப் பார்த்து)
ஐயனே!
ராகம் - முகாரி.
எருமை யென்றென்னை யன்னை ஏளனஞ் செய்யவும் நீர் அருமையாயீன்ற விந்த அபலையின் கண்ணீர் சிந்தப் பெருமையாய்ப் பார்த்திருத்தல் பெரியதோரழகோ நிற்குச் சிறுமை நானடைய வேண்டிச் சிருட்டித்தான் பிரமன் பாரில்
குண:-அடி கழுதை ! என்ன சொன்னாய்? உன்னைப் பெற்ற பெண் போல் பாதுகாத்து வரும் சிற்றியை எவ்வளவு இகழ்ச்சியாய்ப் பேசினாய்? அடி ! உன் சொல் கேட்பவன் நானல்ல. உன்னைச் சாணக்கியனுக்கு முடிசூட்டி வைத்து எக் கதிக்கு ஆளாக்குகின்றேன் பார். சிற்றன்னையின் மனதைப் புண்படுத்திய சிறுக்கியே! நாளன்றைக்கு இந்நேரம் உன்துள் ளலெல்லாம் எவ்விதம் பறக்கிறது, பார். சித்ரா ! வருத்தப் படாதே. வா. போகலாம்.