பக்கம்:இந்திர மோகனா.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

65

மோஹனாவை காலால் உதைத்துத் தள்ளிவிட்டு நிஷ்க்ர

மித்தல்).

(சாகரீகா பிரவேசித்து மோஹனாவைத் தூக்கிப் பிடித்துக் கொள்கிறாள்.)

மோஹ:- தெய்வமே ! என் தலைவிதி என்னைக் காலால் உதைத்துத் தள்ளவுமாய் விட்டதோ ! மாநிலத்தில் பிறந்த தற்குப் பலனிதுவோ ஜனார்த்தனா ? அபலை யான் என் செய் வேன் ?

(நந்தனார் சரித்திர கீர்த்தனை மார்கழிமாதம்.

என்ற மெட்டு).

பல்லவி.

மாநிலம் புகழும் மன்னன் வயிற்றினில்

பிறந்ததின் பயனிதுவோ !

மாற்றாந்தாய் மொழியாலே பெற்றதந்தையு மென்னை

நெட்டித் தள்ளலு மாச்சோ !

ஐயையோ யானிந்த அவனிதன்னிலே

ஆடல்படவும் விதியோ !

ஆண்டவனருளாலே என்னுடை நாதனை

நானடைக்குவேனோ ?

சாக:- அம்மணி! விசனப்படாதீர்கள்.

ராகம் : சாவேரி.

வருந்தினால் பயன்தானென்ன வனிதையே துயரவேண்டாம் பொருந்தி நீர் பதுமநாபன் பொன்னடி பணிந்தவாறே இருந்திட்டினு மதவ்வெண்ணம் ஈடேறுமென்று நீர்தாம் தெரிந்திடீர் சில நாளைக்குள் தெரிவையேபொறுக்கவேண்டும்.

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/82&oldid=1559549" இலிருந்து மீள்விக்கப்பட்டது