பக்கம்:இந்திர மோகனா.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

இந்திர மோஹனா

யென்று சொன்னார்களே, அதுவே போதும். அவர்கள் முன்னே போகிறேன்.

(சதாரத்தில் " நல்லசமயம் நல்லசமயம்" என்றமெட்டு)

நல்லசமயம், நல்லசமயம், நல்லசமயமே

பல்லாண்டாய் வாழவேண்டும் எல்லோருமே:

(15)

நாளைவிட்டு மறுநாள் நமக்கு நிறைய

போளியுடன் ஆமவடை ருசியாய்ப் புசிக்கலாம்.

(ந)

சாகரீகா! சாகரீகா! உன்னைக் காணாமல் கண் மங்கி விட்டது. எங்கெங்கேயோ தேடிவிட்டு இங்கே தானிருப்பா யென்று வந்தேன். (மோகனாவைப் பார்த்து) அம்மா ! நமஸ்- காரம். ஏன் வெளியில் நிற்கிறீர்கள் உள்ளே போகலாமே.

சாக :-அம்மணி ! நல்ல வேளையில் இவர் வந்தார். வருக்கு நூறு ஆயுசு.

விதூ:-அம்மாடி. போதும் போதும். இந்த நாளில் எல்லாரும் அல்பாயுசாக இருக்கிறார்கள். அதற்குள்ளேயே. எவ்வளவோ துக்கம் அனுபவிக்கிறார்கள். நல்ல வேளையாய் எனக்கு அதெல்லா மொன்றுமில்லை. எனக்கு வேண்டிய. இரண்டும் அகப்பட்டுவிட்டால் நான் நூறு இல்லை எத்தனை வருஷமானாலும் சந்தோஷமா யிருப்பேன்.

சாக:- என்ன இரண்டு ?

விதூ:- சொல்லட்டுமா ? ஒன்று நீ என்னைக் கலியா ணம் பண்ணிக்கொள்; இரண்டாவது நானிருக்கும் வரையில் வயிறு நிறைய ஆமவடைவேண்டும். அவ்வளவு தான்.

சாக :- நிரம்ப நன்றாயிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/87&oldid=1559554" இலிருந்து மீள்விக்கப்பட்டது