பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

'இந்தி' பொது மொழியா?


மாட்டாமல் வடமொழிச் சொற்கள் சொற்றொடர்களின் உதவியையே பெரிதுவேண்டி நிற்பனவாய் உள்ள சிறுமையும் வறுமையும் வாய்ந்தனவாகும். மற்றுத், தமிழ்மொழியோ, மேற்காட்டிய மொழிகள் எல்லாந் தோன்று தற்குப் பத்தாயிர ஆண்டுகளுக்கு முன்னமே வழங்கிய முதுமொழியா தலொடு தன்னோ டொத்த பழைமையுடைய ஆரியம், செண்டு, ஈபுரு, கிரேக்கம், இலத்தீன் முதலான மொழிகளெல்லாம் உலக வழக்கில் இன்றி இறந்தொழியவுந், தான் இன்றுகாறும் பரவி வழங்குந் தனிப்பெருஞ் சிறப்பு உடைய தாயுத் திகழா நிற்கின்றது. சென்ற அறு நூறு எழுநூறு ஆண்டு களுக்குள்ளாக வடமொழியிலிருந்து மொழிபெயர்த்து இயற்றப்பட்ட 'கம்பராமாயணம்', 'நளவெண்பா ', நைடதம்', 'வில்லிபுத்தூரர் பாரதம்', 'காசி காண்டம்', கூர்மபுராணம்', 'வாயு புராணம்', 'தலபுராணங்கள்' முதலியன தவிர, எழு நூறாண்டுகளுக்கு முன்னிருந்த செந்நாப் புலவர்களால் ஆக்கப்பட்ட அரும் பெருந் தமிழ் நூல்களெல்லாமுந் தமிழ் மொழிக்கே உரிய சிறப் புடையனவாகும் ; இன்னும் இற்றைக்கு ஆயிரத்தெழு நூறு ஆண்டுகட்கு முன் இயற்றப்பட்ட செந்தமிழ் நூல்களோ வடசொற்களும் வடநூற் பொய்களுஞ் சிறிதும் விரவாத தனிப்பெருஞ் சிறப்புடையனவாகும். மேலும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்த், தமிழ்மொழி யொன்றே இவ்விந்திய தேயம் எங்கும் பேசப்பட்டு வந்த பொதுமொழியாகும். இப்போது இவ்விந்திய நடு நாடு களிற் கோண்டர்' எனப்படும் மாந்தர் பேசும் மொழியும், ஒரிசா நாட்டையடுத்த மலை நாடுகளிற் கொண்டர்' எனும் மக்கள் பேசும் மொழியும், வங்காள தேயத்தின் ராஜமால் மலைகளில் உறையும் 'மாலர்' என்னும் மக்கட் குழுவினர் வழங்கும் மொழியும், சூடியா நாகபுரத்திலும் அதனையடுத்த நாடுகளிலும் இருக்கும் 'ஓரா ஓனர்' என்னும் மாந்தர் கூட்டம் பேசும் மொழியும், இவ்விந்திய தேயத்தின் வடமேற்கே யுள்ள பெலுசித்தானத்தில் உயிர்