பக்கம்:இனிக்கும் பாடல்கள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
என்ன கொண்டு வந்தேன் ?


பழநி மலைக்குச் சென்று வந்தேன்;
பஞ்சா மிர்தம் கொண்டு வந்தேன்.

காசி நகரம் சென்று வந்தேன்;
கங்கை நீரைக் கொண்டு வந்தேன்.

திருப்ப திக்குச் சென்று வந்தேன்;
தித்திப்பு லட்டுக் கொண்டு வந்தேன்.

இராமேஸ் வரம் சென்று வந்தேன்:
என்ன நானும் கொண்டு வந்தேன் ?

ஊ... ஊ... ஊ...
ஊ... ஊ... ஊ...
ஊது கின்ற சங்கில்
ஒன்று வாங்கி வந்தேன்

10