பக்கம்:இனிக்கும் பாடல்கள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தங்கமும் சிங்கமும்


எங்கள் வீட்டுப் பூனை அம்மா
இரண்டு பிள்ளை பெற்றாள்.
இரண்டு பிள்ளை பெற்றாள்-அவள்
என்ன பேரு வைத்தாள் ?

தங்கம் என்றோர் பிள்ளை பெயராம்.
தவிட்டு நிறத்துப் பிள்ளை.
தவிட்டு நிறத்துப் பிள்ளை-அது
தப்பே செய்வ தில்லை.

சிங்கம் என்றோர் பிள்ளை பெயராம்.
தீரம் உடைய பிள்ளை.
தீரம் உடைய பிள்ளை-அது
தீங்கே செய்வ தில்லை.

தங்கம், சிங்கம் இரண்டும் அந்தத்
தாய்க்கு நல்ல பிள்ளை.
தாய்க்கு நல்ல பிள்ளை-இதில்
சற்றும் ஐயம் இல்லை !

14