பக்கம்:இனிக்கும் பாடல்கள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பட்டுப் போன்ற உடலுடனே
பலநி றத்தில் இறகுடனே
கட்டை யான குரலுடனே
களித்து நடனம் ஆடும்.அது
என்ன தெரியுமா ? தம்பி
என்ன தெரியுமா ?

வட்ட மான முகத்துடனே
வளைந்தி ருக்கும் மூக்குடனே
முட்டை போன்ற கண்னுடனே
வேட்டை ஆடும் இரவில் அது
என்ன தெரியுமா ? தம்பி
என்ன தெரியுமா ?


விடைகள் : ஒட்டகம், யானை, மயில், ஆந்தை