பக்கம்:இனிக்கும் பாடல்கள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


வால்


ஈயை ஓட்ட என்றும் உதவும்
பசுவின் வால்.
எதிர்த்து நீந்தத் துடுப்பாய் உதவும்
மீனின் வால்,
குளிரில் உடம்பைச் சூடு படுத்தும்
அணிலின் வால்
கிளையில் மாட்டித் தொங்கிட உதவும்
குரங்கின் வால்,
கொடிபோல் ஆட்டி ஆபத்து உணர்த்தும்
முயலின் வால்.
கோபம் வந்தால் சிலிர்த்து நிற்கும்
பூனை வால்.
நன்றியைக் காட்ட நன்றாய் உதவும்
நாயின் வால்.
நமக்கும் இருந்தால் எப்படி உதவும் ?
எண்ணிப் பார்.